நாம் எண்னும் எண்ணங்கள் உயர்வாயிருக்க வேண்டும். எண்ணங்கள் உயர்ந்தால் சொல் தூய்மையடையும். சொல் தூய்மையடைந்தால் செயல் தூய்மையடையும். செயல் தூய்மையடைந்தால் நாம் உயர்வோம். நாம் உயர்ந்தால் நாடு உயர்வடையும். எனவேதான் அவ்வையும்,
“அறம் செய விரும்பு” என்றார். வள்ளுவரும்,
“ வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனைய உயர்வு” என்றார். உள்ளுவதெல்லாம் உயர்வு உள்ளல் என்பதற்கேற்ப உயர்வானவற்றையே எண்ணி, நாமும், வீடும், நாடும் உயர்வோமாக!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக