புதன், 17 பிப்ரவரி, 2010

திருக்கழுக்குன்றப் திருப்பதிகங்கள் - சுந்தரர்

சுந்தரர் பதிகம் & பாடல்
திருச்சிற்றம்பலம்
திருமுறை : 7/93        பண் : பழம் பஞ்சுரம்
கொன்று செய் கொடுமையால் பலசொல்லவே
நின்ற பாவவினைகள் தாம்பல நீங்கவே
சென்று சென்று தொழுமின் தேவர்பிரானிட்ம்
கன்றினோடு பிடிசூழ் தண்கழுக் குன்றமே.           1

இறங்கிச் சென்று தொழுமின் இன்னிசைபாடியே
பிறங்கு கொன்றைச் சடையன் எங்கள் பிரானிடம்
நிறங்கள் செய்த மணிகள் நித்திலம் கொண்டிழி
கறங்கு வெள்ளை அருவி தண்கழுக் குன்றமே.   2

நீளநின்று தொழுமின் நித்தலும் நீதியால்
ஆளும் நம்ம வினைகள் அல்கி அழிந்திட
தோளும் எட்டும்  உடைய மாமணிச் சோதியான்
காளகண்டன் உறையும் தண்கழுக் குன்றமே.      3

வெளிறுதீரத்தொழுமின் வெண்பொடி ஆடியை
முளிறிலங்கு  மழுவாளன் முந்தி உறைவிடம்
பிளிறுதீரப் பெருங்கைப் பெய்மதம் மூன்றுடைக்
களிறினோடு பிடிசூழ் தண்கழுக் குன்றமே.            4
புலைகள்தீரத் தொழுமின் புன்சடைப் புண்ணியன்
இலைகொள் சூலப்படையன் எந்தை பிரானிடம்
முலைகளுண்டு தழுவிக் குட்டியொடு முசுக்
கலைகள் பாயும் புறவின் தண்கழுக் குன்றமே.     5

டமுடைய அடியார் தன்மனத்தே உற
விடமுடைய மிடறன் விண்ணவர் மேலவன்
படமுடைய அரவன் தான்பயிலும் இடம்
கடமுடைய புறவின் தண்கழுக் குன்றமே.              6
ஊனமில்லா அடியார் தன்மனத்தே உற
ஞானமூர்த்தி நட்டாடி நவிலும் இடம்
தேனும் வண்டும்  மதுவுண்டு இன்னிசை பாடியே
கானமஞ்சை உறையும் தண்கழுக் குன்றமே.           7 

ந்தமில்லா அடியார் தம்மனத்தே உற
 வந்துநாளும் வணங்கி மாலோடு நான்முகன்
சிந்தைசெய்த மலர்களும் நித்தலும் சேரவே
கந்தம்நாறும் புறவின் தண்கழுக் குன்றமே.                8

 பிழைகள் தீரத் தொழுமின் பின்சடைப் பிஞ்சகன் 
குழைகள்காதன் குழகன் தானுறையும் இடம்
மழைகள் சாலக்கலித்து நீடுயர் வேயவை
குழைகொள் முத்தம் சொறியும் தண்கழுக் குன்றமே.  9

பல்லில் வெள்ளைத் தலையன் தான் பயிலுமிடம்
கல்லில் வெள்ளை யருவித் தண்கழுக் குன்றினை 
மல்லில் மல்கு  திரள்தோள் ஊரன் வனப்பினால்
சொல்லல் சொல்லித் தொழுவாரைத் தொழுமின்.         10  

திருஇடையாறு  
திருமுறை : 7/77        பண் : கொல்லி / பழஞ்சுரம்
பாடல் எண் : 4
ச்சையூர் காவங் கழுக்குன்றம்  காரோணம் 
பிச்சையூர் திரிவான் கூவூர் வடபேறூர்
கச்சியூர் கச்சிக்கல் நெய்த்தானம் மிழலை 
இச்சையூர் எய்தமான் இடையாறு இடைமருதே.



கருத்துகள் இல்லை:

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1