திருப்பள்ளியெழுச்சி-ஏழாம் பாடல்
அதுபழச் சுவையென அமுதென அறிதற்
கரிதென எளிதென அமரரும் அறியார்
இதுஅவன் திருவுரு இவனவன் எனவே
எங்களை ஆண்டுகொண்டி ங்கெழுந் தருளும்
மதுவளர் பொழில்திரு உத்தர கோச
மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா
எது எமைப் பணிகொளும் ஆறது கேட்போம்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.
திருப்பாவை - இருபத்து ஏழாம் பாடல்
கூடாரை வெல்லுஞ்சீர் கோவிந்தா! உந்தன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே, தோடே, செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூட நெய்பெய்து முழங்கை வழிவார
கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.
பகைவரை வெல்லும் சிறப்புடைய கோவிந்தனே! நாட்டிலுள்ளவர் கொண்டாடும்படியாக சூடகமும், தோள்வளையும், தோடும், செவிப்பூவும், பாடகமும் ஆகிய அணிகலண்களை நீ அணிவிக்க, நாங்கள் அணிந்து கொள்வோம். அதன் பின் பட்டாடைகளை உடுத்திக் கொள்வோம். பின் பாற்சோறை மறைக்குமளவு நெய்யை வார்த்து அதை முழங்கை வழியுமாறு உண்போம். உன்னைப் பாடி நோன்புக்கு வேண்டிழ பறையைப் பெற்று விரதம் முடிப்போம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக