திங்கள், 1 ஜூன், 2015

தருமை ஆதீனக் குருமுதல்வர் ஸ்ரீ குருஞானசம்பந்தர் அருளிய ”சிவபோக சாரம்” பாடல் எண் -12 :




தன்பெருமை எண்ணாமை தற்போத மேயிறத்தல்
மின்பெருமை யாம்சகத்தை வேண்டாமை - தன்பால்
உடலைத் தினம் பழித்தல் ஓங்கு சிவத்து ஒன்றல்
நடலைப் பிறப்பொழிய நாள்.

பொருள்: தன் பெருமையினைத் தான் எண்ணாத பணிவும், தன்முனைப்பாகிய சீவபோதம் நீங்குதலும், மின்னுப்போலக் கடித்ற் தோன்றி மாய்தலையே பெருமையாக உடைய உலகத்தின் நிலையாமையை நோக்கி அதனை விரும்பாமையும், தன்னிடத்து உள்ள உடம்பை அதன் புன்மை நோக்கி எஞ்ஞான்றும் அருவருத்து ஒழுகுதலும், பெரும் பொருளாகிய சிவத்தில் மனம் பதிதலுமாகிய இவை தோன்றுங் காலமே துன்பத்தைத் தரும் பிறவி நீங்குங் காலம். 

சிவாயநம! சிவாயநம! சிவாயநம!

திருக்கழுக்குன்றின் செல்வா போற்றி!

கருத்துகள் இல்லை:

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1