திங்கள், 20 மார்ச், 2017

திருக்கழுக்குன்றம் பதிகம் - திருஞான சம்பந்தர்

அருள்தரு திரிபுரசுந்தரி உடனுறை அருள்தரு வேதகிரீஸ்வரர் துணை

தோடுடையான் ஒருகாதில் தூய குழை தாழ
ஏடுடையான் தலை கலனாக இரந்துண்ணும் 
நாடுடையான் நள்ளிருள் ஏம நடமாடும்
காடுடையான் காதல் செய் கோயில் கழுக்குன்றே!
                                                                                    (  - 1-103-1 ) பண்:  குறிஞ்சி

பொருள் : ஒரு காதில் தோடும், ஒருகாதில் குழையும் அணிந்து உமை ஒரு பாகனாக விளங்குகின்றான். ஏடுகளை கையில் கொண்ட நான்முகம் கொண்ட பிரமனின் தலை ஓட்டினை பிச்சைப் பாத்திரமாக கையில் ஏந்தி பிச்சை ஏற்றுக் கொண்டு வருகின்ற நாட்டை உடைமையாகக்  கொண்டவன். மகா பிரளய காலத்தில் சுடுகாட்டில் நடனமாடுகின்றான். இத் தன்மைகளை உடைய எம்பெருமான் சிவன் அன்பினால் விரும்பி கோயிலில் உறைகின்ற இடம் திருக்கழுக்குன்றமே!

கருத்துகள் இல்லை:

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1