திருஆரூர்
இறைவர் திருப்பெயர் :
- வன்மீக நாதர்,
- புற்றிடங் கொண்டார் ( மூலட்டானம் - பூங்கோவில் ),
- தியாகராஜர்.
- அல்லியம் பூங்கோதை,
- கமலாம்பிகை,
- நீலோத்பலாம்பாள்.
தீர்த்தம்:
- கமலாலயம்,
- சங்கு தீர்த்தம்,
- கயா தீர்த்தம்,
- வாணி தீர்த்தம்
- திருமால்,
- திருமகள்,
- இராமர்,
- மன்மதன்,
- முசுகுந்த சக்ரவர்த்தி.
திருஞான சம்பந்தர் :
- சித்தம் தெளிவீர்காள் ... [ 1/91 ],
- பாடலன் நான்மறையான் ... [ 1/105 ],
- பவனமாய்ச் சோடையாய் ... [ 2/79 ],
- பருக்கையானை மத்தகத் ... [ 2/101 ],
- அந்தமாய் உலகு ... [ 3/45 ]
திருவாவுக்கரசர் :
- பாடிளம் பூதத்தினான் ... [ 4/4 ],
- மெய்யெல்லாம் வெண்ணீறு ... [ 4/5 ],
- எத் தீப்புகினும் ... [ 4/17 ],
- சூலப் படையானை ... [ 4/19 ],
- காண்டலே கருத்தாய் ... [ 4/20 ],
- முத்து விதானம் ... [ 4/21 ],
- படுகுழிப் பவத்தன்ன ... [ 4/52 ],
- குழல் வலம்கொண்ட ...[ 4/53 ],
- குலம் பலம்பாவரு ... [ 4/101 ],
- வேம்பினைப் பேசி ... [ 4/102 ],
- எப்போதும் இறையும் ... [ 5/6 ],
- கொக்கரை குழல் ... [ 5/7 ],
- கைம்மான மதகளிற்றின் ... [ 6/24 ],
- உயிரா வனமிருந்த ... [ 6/25 ],
- பாதித்தன் திருவுருவில் ... [ 6/26 ],
- பொய்ம் மாயப் பெருங்கடலில் ... [ 6/27 ],
- நீற்றினையும் நெற்றிமே ... [ 6/28 ],
- திருமணியைத் தித்திக்கும் ... [ 6/29 ],
- எம்பந்த வல்வினை நோய் ... [ 6/30 ],
- இடர் கெடுமாறெண்ணுதியேல் ... [ 6/31 ],
- கற்றவர்கள் உண்ணும் ... [ 6/32 ],
- பொரும்கை மதகரி ... [ 6/33 ],
- ஒருவனாய் உலகேத்த ... [ 6/34 ].
- இறைகளோடு இசைந்த ... [ 44 ],
- குருகுபா யக்கொழுங் ... [ 45 ],
- தில்லைவாழ் அந்தணர் ... [ 46 ],
- பத்திமையும் அடிமை ... [ 47 ],
- பொன்னும் மெய்பொருளும் ... [ 48 ],
- கரையுங் கடலும் ... [ 49 ],
- அந்தியும் நண்பகலும் ... [ 50 ],
- மீளா அடிமை ... [ 51 ],
- தூவாய ... [ 52 ],
- பாறு தாங்கிய ... [ 98 ],
- காட்டூர் கடலே ... [100].
சிறப்புகள்
- இத்தலம் "பிறக்க முத்தி திருஆரூர் " என்று புகழப்படும் சிறப்பினது.
- இத்தலத்தில் சாயரட்சை எனப்படும் திருவந்திக்காப்பு வழிபாட்டின்போது தேவேந்திரனே வவ்து பெருமானைப் பூசிப்பதாக ஐதீகம்.
- கமலை என்னும் பராசக்தி தவம் செய்த பதி.
- எல்லாச் கிவாலயங்களின்சந்நிதித்தியனமும் சாயரட்சை எனப்படும் திருவந்திக்காப்பு நேரத்தில் இத்தலத்தில் விளங்குவதாக ஐதீகம்.
- இத் தலத்தின் தேர், திருவிழா, திருக்கோவில், திருக்குளம் ஆகியன மிகப் பெருமை வாய்ந்தது.திருவாரூர்த் தேர் அழகு.
- ஏழு கோபுரங்களைக் கொண்டது இத் திருகோவில்.
- கீழ்க் கோபுரம் 118 அடி உயரம் கொண்டது. இத் தலம் வீதிப் பிரகாரங்களையும் சேர்த்து ஐந்து பிரகாரங்களைக் கொண்டுள்ளது.
- கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி (கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி, ஓடை ஐந்து வேலி என்பது இங்கு வழங்கப்படும் பழமொழி) என்று போற்றப்படும் மிகப் பெரிய சிவாலயமும், கமலாலயம் என்ற தீர்த்தமும் உடையத் தலம்.
- தியாகேசர் எழுந்தருளும் ஏழு விடங்கத் தலங்களுள் ஒன்று. [ வீதி விடங்கர் ] சப்த கவிடங்கத் தலங்களுள் இது "மூலாதாரத் தலம்."
- பஞ்ச பூதத் தலங்களுள் "பிருதிவித் (மண் )தலம்.
- இத் தலத்திற்குரிய வேறு பெயர்கள் :
- ஷேத்ரவரபுரம்,
- ஆடகேசுரபுரம்,
- தேவயாகபுரம்,
- முசுகுந்தபுரம்,
- கலிசெலா நகரம்,
- அந்தரகேசுபுரம்,
- வன்மீகநாதபுரம்,
- தேவாசிரியபுரம்,
- சமற்காரபுரம்,
- மூலாதாரபுரம்,
- கமலாயபுரம்.
- தியாகராஜர் பெருஞ்சிறப்புடன் "அஜபா நடன" மூர்த்தியாக திகழும் பதி.அதாவது திருமாலின் மார்பில் அமர்வ்து மூச்சிக்காற்றை உள்ளிழுத்து வெளியிடும்போது அசைந்தாடும் நடையில் உள்ள அதே நடனத்தை இங்கு ஆடுகிறார்.
- இத்தலத்து இறைவர்:
- வீதி விடங்கர்,
- தேவரகண்டப்பெருமான்,
- தியாகப்பெருமான்,
- ஆடரவக்கிண்கிணிக்காலழகர்,
- செங்கழுநீரழகர்,
- செவ்வந்தித்தோடழகர்,
- கம்பிக்காதழகர்,
- தியாகவிநோதர்,
- கருணாகரத் தொண்டைமான்,
- அசைந்தாடும் அப்பர்,
- அடிக்காயிரம் பொன்வழங்கியவர்,
- கமலேசர்,
- செம்பொன் தியாகர்,
- தேவசிந்தாமணி,
- தியாகசிந்தாமணி என்றுஇன்னும் பலப்பல திருநாமங்களில் சிறப்பிகப் படுகிறார்.
- மனுநீதிச் சோழன் நீதி கேட்ட, தங்கன்றை இழந்த ஒரு பசுவிற்காக தன் ஒரே மகனைத் தேரேற்றிக் கொன்று நீதி வழங்கியத் தலம்.
- ஆடு தண்டு - மணித்தண்டு,
- கொடி - தியாகக்கொடி,
- ஆசனம் - இரத்தின சிம்மாசனம்,
- மாலை - செங்கழுநீர்மாலை,
- வாள் - வீரகண்டயம்,
- நடனம் - அஜபா நடனம்,
- யானை -ஐராவணம்,
- மலை - அரதன சிருங்கம்,
- முரசு - பஞ்சமுக வாத்தியம்,
- நாதஸ்வரம் - பாரி,
- மத்தளம் - சுத்த மத்தளம்,
- குதிரை - வேதம்,
- நாடு - சோழ நாடு,
- ஊர் - திருவாரூர்,
- ஆறு - காவிரி,
- பண் -பதினெண்வகைப்பண், என்பன இவை யாவும் இத்தலத்துப் பெருமானுக்குரிய அங்கப்பொருளாகும்.
- தியாகேசப் பெருமான் இராஜாதி இராஜா. ஆதலின் அவர் வீதிகளில் தனியாக எழுந்தருளுவதில்லை.அவருடன்
- அருளிப்பாடியார்,
- உரிமையில் தொழுவார்,
- உருத்திரப்பல்கணத்தார்,
- விரிசடை மாவிரதிகள்,
- அந்தணர்கள்,
- சைவர்கள்,
- பாசுபதர்கள்,
- கபாலியர்கள் ஆகிய எட்டு கணங்கள் சூழ வருவார்.
- "இம் மணிமுத்தாற்றில் இப் பொன்னை இட்டு, ஆரூர் கமலாயத்தில் எடுத்துக் கொள்" என்று முதுக்ன்றத்து ஈசரால் சுந்தரரைப் பணிக்கப்பட்டத் தலம்.
- சுந்தரர் வேண்டிக் கொண்டதன் பேரில் அவருக்காக இத் தலத் தியாகேசப் பெருமானார் நள்ள்ளிரவில் பரவை நாச்சியாரிடம் தூது செல்ல இவ்வூர்த் தெருக்களில் நடவ்து சென்ற பெருமையுடையத் தலம்.
- பரவை நாச்சியார் வாழ்ந்த பதி.
- சுந்தரர் இழந்த இரண்டாவது கண்ணை பெற்ற பதி.
- சுந்தரர், "திருத்தொண்டர் தொகை"யைப் பாடுதற்கு, அடியவர்களின் பெருமைகளை விளக்கிய பெருமையை உடையது இப்பதி.
- அறுபத்து மூன்று நாயன்மார்களுள்
- நமிநந்தியடிகள்,
- செருத்துணை நாயனார்,
- தண்டியடிகள்,
- கழற்சிங்க நாயனார்,
- விறன்மிண்டர் ஆகியோர் முக்தித் த்லம்.
இருப்பிடம்
தமிழ்நாடு மாநிலத்தில் மயிலாடுதுறை - திருத்துறைப்பூண்டி, தஞ்சாவூர் - திருத்துறைப்பூண்டி இரயில் பாதையில் உள்ள நிலையம். தஞ்சாவூர், மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக