திருச்சிறம்பலம்
[2]திருநள்ளாறு
இறைவர் பெயர் : தர்பாரண்யேஸ்வரர், திருநள்ளாற்றீசர்
இறைவி பெயர் : போகமார்ந்த பூணமுலையாள், பிராணாம்பிகை
தலமரம் : தர்பை
தீர்த்தம் : நள தீர்த்தம் - சரஸ்வதி தீர்த்தம்- பிரம்ம தீர்த்தம் - அகஸ்தியர் தீர்த்தம்.
வழிபட்டோர் : திருமால் - பிரமன் - இந்திரன் - அகத்தியர் - புலஸ்தியர் - அர்ச்சுனர் - நளச்சக்ரவர்த்தி - திக்குப்பாலகர்கள் -வசுக்கள் - போஜன் - முசுகுந்த சக்ரவர்த்தி.
தேவாரப் பாடல்கள் :
திருஞானசம்பந்தர் :
(1) பாடக மெல்லடிப் பாவை ... 1 / 07
(2) போகமார்ந்த பூண்முலையாள் ... 1 / 49
(3) ஏடுமலி கொன்றையா ... 2 / 33
(4) தளிரிள வளரொளி ... 3 / 87
திருநாவுக்கரசர் :
(1) உள்ளாறாததோர் புண்டரிகத் திரள் ... 5 / 68
(2) ஆதிக்கண்ணான் முகத்திலொன்று ... 6 / 20
சுந்தர மூர்த்தி நாயனார் :
(3) செம்பொன் மேனிவெண் ணீறணி .... 68
தலவரலாறு
- தர்ப்பைக் காட்டிலிருந்து சுயமாக எழுந்ததால் இவர் தர்பாரண்யேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
- இது நளன் பூஜித்தக் காரணத்தால், நள்ளாறு எனப்படுகிறது. இறைவன் அருளால், நளன் சனியின் இடர் நீங்கப் பெற்றான்.
- திருஞான சம்பந்தர், திருஆலவாயில் (மதுரை) சமணரோடு நடத்திய அனல் வாதத்தின் போது, இத்தலப் பதிகமான ”போகமார்ந்த பூண்முலையாள்” என்ற பதிகத்தை அனலிலிட , அது தீப்பற்றாமல், பச்சைப் பதிகமாய் நின்று சைவத்தை நிலைநாட்டியது.
- இது முசுகுந்த சக்ரவர்த்தி எழுந்தருளுவித்த “சப்த் விடங்கத் தலங்களுள்” ஒன்றாகும்.
- தியாகராஜர் - “நக விடங்கர்” பச்சை மரகதத்தால் ஆன விடங்கர்- நடனம்- உன்மத்த நடனம். இம்மரகத லிங்கத்திற்கு தினமும் இருகால அபிடேகம் நடைபெறுகின்றது.
- நளன் தீர்த்தம், நளன் கலி நீங்கிய தீர்த்தன் என் அழைக்கப்படுகிறது.
- நளன் குளக்கரையில் கலிதீர்த்த விநாயகர் அமர்ந்துள்ளார். அவ்விநாயகர் கோயிலில் உள்ள கிணறில் கங்கை தீர்த்தம் பெருக்கெடுப்பதாக ஐதீகம். அந்த கிணற்றுக்கு எதிரில் நந்தி ஒன்றுள்ளது. அக்கிணற்றில் உள்ள நீரை தர்பாரண்யேஸ்வரருக்கு தினமும் எடுத்துச் சென்று அபிஷேகம் செய்கிறார்கள்.
- தர்பாரண்யேஸ்வரர் சுவாமி சன்னதிக்கு எதிரே பலிபீடம் சற்று விலகி உள்ளது. கோவிலுக்கு பால் ஊற்றிய இடையனுக்காக பொய் கணக்கு எழுதிய கோயில் கணக்கரைத் தண்டிக்க ஈசன் தன் சூலாயுதத்தை ஏவினார். என்வே பலிபீடம் சற்று விலகி வழிவிட்டது. இன்றும் அந்நிலையிலேயே உள்ளது. கணக்கருடைய மண்டை (தலை) சென்று விழுந்த இடமே மண்டைக் குளம். அது இப்போது மட்டைக் குளம் என்றும் பிரம்மதீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது.
- நிடத நாட்டு மன்னன் நளனை சனி பற்ரினான். அதனால் நளன் தன் நாடு- இழந்து மனைவி மக்களை இழந்து, கார்க்கோடன் என்ற பாம்பால் தீண்டப்பட்டு தன் உருமாறி துன்பப்பட்டான். பின்னர் திருநள்ளாறு வந்து நள தீர்த்தத்தில் நீராடி தர்பாரண்யேஸ்வரரை வழிபட கோவிலின் உள்ளே சென்றான். சனியும் சிவனுக்காக நளனிடமிருந்து சற்றே விலகி மூன்றாவது கோபுரதிற்கு அருகில் உள்ள மாடத்தில் எழுந்தருளினார். எஅவபெருமானின் அருளாணையின்படி சனி அனுக்கிரக மூர்த்தியாக எழுந்தருளி தர்பாராண்யேஸ்வரரை வழிபட வரும் பக்தர்களுக்கு அருள் புரிகிறார்.
- இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டபின்னரே சனீஸ்வரன் சந்நிதிக்கு செல்ல வேண்டும். இத்தலத்தின் “போகமார்ந்த பூண்முலையாள்” என்ற பதிகத்தைப் பாடி தர்பாரண்யேஸ்வரை வழிபட சனி விலகும்.
- இத்தலத்தில் சொர்ண விநாயகர் மற்றும் மூல விநாயகர் என்று இரு விநாயகர்களும், தர்பாராண்யேஸ்வரர் மற்றும் தியாகராஜருக்கருகில் இரு தட்சிணாமூர்த்திகளும், சண்டிகேஸ்வரர் சந்நிதியில் இரு சண்டிகேஸ்வரர்களும் இருப்பது வேறு எந்த சிவாலயத்திலும் காணவியலாத ஒன்று. இக்கோவிலில் உள்ள இடையன் சந்நிதிக்கு எதிரே நந்தி ஒன்றுள்ளது.
- இது தருமை ஆதீனக் கோயிலாகும்.
- சோழர்கால கல்வெட்டுகள் இரண்டு உள்ளன.
அமைவிடம் :
- பேரளம் - காரைக்கால் இரயில் பாதையில் உள்ளது. இரயில் நிலையத்திற்கு அருகிலேயே கோயில் உள்ளது.
- காரைக்கால், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது.
- தரிசன நேரம் : 06.00 - 12.00 & 04.00 - 9.00
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக