செவ்வாய், 26 அக்டோபர், 2010

ஸப்த ஸ்தலங்கள்

திருச்சிற்றம்பலம்

[3]திருக்காறாயில்

இறைவர் பெயர் : கண்ணாயிரமுடையார்
இறைவியர் பெயர் : கைலாசநாயகி
தலமரம்: பலா, அகில், காறாயில்
தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், சேஷதீர்த்தம்
வழிபட்டோர் : இந்திரன் - முசுகுந்த சக்ரவர்த்தி

தேவாரப் பாடல்கள் : சம்பந்தர்: நீரானே நீள்சடை ... 2 / 15

சிறப்புகள் :
  • ஸப்த விடங்கத் தலங்களில் ஒன்று.
  • திர்யாகராஜர் - ஆதிவிடங்கர்.
  • வீர சிங்காதனம்.
  • நடனம் - குக்குட நடனம். கோழி நடனம். கோழி வேகமாகவும், நேராகவும், பக்கவாட்டிலும் ஓடுவது போன்ற நடனம்..
  • இங்குள்ள கடுக்காய்ப் பிள்ளையார் பிரசித்தமானவர்.
  • கண்பார்வை இழந்த பெண் ஒருத்திக்குப் பார்வை அளித்து ஒளியினை ஆயிரம் மடங்காகப் பெருக்கிக் கட்டியதால்  “கண்ணாயிரம் உடையார்” எனப் பெயர் பெற்றார்.
  • இங்குள்ள சேஷ தீர்த்தம் என்ற கிணறில் உள்ள நீரை ஓவ்வொரு நாளும் குடித்து வந்தால் பிணிகள் தீரும் என்று சொல்லப்படுகிறது.
  • இங்குள்ள மரகத லிங்கம் விஷேஷம். காலை, மாலை இரு வேளைகளிலும் தேன், பாலுடன் அபிடேகம் பிரசித்தம்.
  • பஞ்ச சிவத்தலங்களில் முதன்மையானதாகவும் உள்ளது.
  • ப்ரம்மஹத்தி தோஷம் நீக்கக்கூடிய இரு தலங்களில் (திரு இடைமருதூர், திருக்காரவாசல்) ஒன்று.
  • பதஞ்சலி , வியாக்கிரபாத முனிவர்கள் தங்கி இறையருள் பெற்ற தலம்.
  • அகத்திய மாமுனிவருக்கு நாடி சோதிடம் எழுதிட அருள் புரிந்தத் தலம்.
  • புதன் பகவானால் பிரன்னம் செய்யப்பட்டதும்., அஷ்ட திக்குகளிலும் சிவத் தலங்கள் அமைந்து, மகா சிவ சக்கர மையமாகி கபிலமுனிவர் மற்றும் வள்ளலார் ஆகியோரால் பூஜிக்கப்பட்டது.
  • பன சாரண்யம், காளாகருவனம் என்று புராணங்களில் புனிதப் படுத்தப் பட்டத் தலம்.
அமைவிடம்: திருவாரூரிலிருந்து தென்கிழக்கே 12-கி.மீ. தூரத்தில் உள்ளது. திருவாரூரிலிருந்து கச்சனம், திருத்துறைப்பூண்டு செல்லும் பேருந்துகளில் செல்லலாம்.


Kavitha, Joint Commissioner, HR&CE, handing over the Maragatha Lingam to the temple priest V.Sivakumar at Tirukaravasal near Tiruvarur on Wednesday 24/12/2009

Maragatha Lingam, which waas stolen from the Thyagarajaswamy temple ar Tirukaravasal near Tiruvarur in 1992 and recovered by the police recently, was handed over to templ authorities by the idol wing police on Wednesday. - THE HINDU.24-12-2009
தரிசன நேரம் : மு.ப. - 07.00 - 12.00 / பி.ப. - 04.00 - 8.00

கருத்துகள் இல்லை:

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1