செவ்வாய், 26 அக்டோபர், 2010

சப்த விடங்கர்த் தலங்கள்

திருச்சிற்றம்பலம்

[6] திருநாகைக்காரோணம்
இறைவர் பெயர் : காயாரோகணேஸ்வரர் - ஆதிபுராணர்
இறைவி பெயர் : நீலாயதாட்சி - கருந்தடக்கண்ணி
தலமரம் : மாமரம்
தீர்த்தம் : தேவ தீர்த்தம் - புண்டரீகத் தீர்த்தம்
வழிபட்டோர் : ஆதிசேஷன் - புண்டரீக முனிவர் - அகத்தியர் - அம்பிகை - முருகன் - திருமால் - வசிட்டர்-முசுகுந்த சக்ரவர்த்தி - அரசகேசரி - விசித்திரகவசன் - விரூரகன் - பத்திரசேனன் - பாற்கரன் - மித்திரன் - காளகண்டன் - சண்டதருமன் முதலியோர்.

தேவாரப் பாடல்கள் : 
சம்பந்தர் : 
  1. புன்னையும் விரிகொன்றை ...  1 / 84
  2. கூனல்திங்கட் குறுங்கண்ணி ... 2 / 116
அப்பர்: 
  1. மனைவி தாய் தந்தை ... 4 / 71
  2. வடிவுடை மாமலை ... 4 / 103
  3. பாணத்தால் மதில் ... 5 / 83
  4. பாரார் பரவும் ...  6 / 22
சுந்தரர் :
  1. பத்தூர்க் கிரந்துண்டு ... 7 / 
சிறப்புகள் :
  • இது ஆதி சேஷனால் பூஜிக்கப்பெற்றதால், நாகை என்ப் பெயர் பெற்றது.
  • அறுபத்து நான்கு சக்தி பீடங்களில் ஒன்று. 
  • அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான மீனவர் குலத்தில் உதித்த அதிபத்த நாயன்மாரின் அவதாரத் தலம்.
  • புண்டரீக முனிவரி இறை தனது தேகத்தில் ஆரோகரணம் செய்து கொண்டமையால் காயாரோகணம் என்று பெயர். இது மருவி காரோணம் என்றாயிற்று. 
  • காரோணம் என்ற பெயருடைய திருக்கோயில்கள் மூன்று உள்ளன.
  • அவையாவன: (1) கச்சிக்காரோணம்; (2) குடந்தைக்காரோணம்; (3)நாகைக்காரோணம்.
  • ஆதிபுராணம் - சிவராசதானி - பார்ப்பதீச்சரம் - அரவநகரம் - முதலிய பெயர்களாலும் இத்தலம் விளங்கியுள்ளது என்று தலபுராணம் கூறுகிறது.
  • அகத்தியருக்குத் திருமணக்காட்சி நல்கிய தலம். 
  • ஸப்த் ரிஷிகளுக்கு இறைவன் மூல லிங்கத்திலிருந்து தோன்றி சோமாஸ்கந்தராய்க் காட்சிக் கொடுத்தத் தலம்.
  • சாலிசுக மன்னனுக்குத் திருமணக் கோலம் காட்டும் பஞ்சக்குரோச யாத்திரையாகிய சப்தஸ்தான விழா நடைபெறும் தலமாகவும் இத்தலம் விளங்குகின்றது.
  • சுந்தரருக்கு இறைவன் குதிரை - முத்துமாலை - நவமணிகள் - பட்டு - சாந்தம் - சுரிகை முதலானவை வழங்கியத் தலம்.
  • ஸப்த விடங்கர்த்தலங்களுள் ஒன்று. 
  • தியாகராஜர் - சுந்தர விடங்கர்; நடனம் - பாராவாரதரங்க நடனம். பாராவாராம் = கடல்; தரங்கம் = அலை; அஃதாவது கடலைப்போன்று  எழுந்து சுருண்டு மடங்கி விழுந்தாடும் நடனம்.
  • கயிலையும், காசியையும் போன்று இத்தலம் முத்தி மண்டபத்தைக் கொண்டுள்ளது. 
  • மூவர் பெருமக்களால் பாடல் பெற்றத் தலம்.
  • அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடல்களும் பெற்றத் தலம்.
  • இத்தல இரதம் கண்ணாடித் தேராகும்.
  • ஏழு கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. முதல் இராசராசன், குலோத்துங்கன் முதலியோர் காலத்துக் கல்வெட்டுகள் அவை.
  • சோழ மன்னர்களின் தலைநகரங்களுள் ஒன்றாகவும் இவ்வூர் விளங்கியது.
  • நாகப்பட்டிணத்துச் சோழன் பிலத்துவாரத்தால் நாகலோகம் சென்று நாககன்னிகையை கூடிப் பெற்ற புதல்வனே தொண்டைநாட்டை ஆண்ட இளந்திரையன் எனப்  “பத்துப்பாட்டால்” அறிகிறோம்.
  • குறுந்தொகைப் புலவர் ஒருவரின் பெயர் நன்நாகையார் எனaக் கூறப்படுகின்றது.
  • நரின் மத்தியில் இக்கோயில் 180 மீட்டர் நீளம், 75 மீட்டர் அகலம் நிலப்பரப்பு கொண்டு, இரண்டு பிரகாரங்களுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
  • வைகாசியில் பிரமோற்சவமும், ஆடி, தை அமாவாசை, மாசி மகம் அதிபத்தர் திருவிழா ஆகிய நாள்களில் சுவாமி கடலில் தீர்த்தவாரி அருளுகின்றார்.
  • நாகைக்காரோணப் புராணம் 61 - படலங்களையும், 2506 பாடல்களையும் கொண்டது. இந்நூல் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களால் இயற்றப் பெற்று 1860 - இல் அரங்கேற்றப்பெற்றது.
அமைவிடம் : நாகப்பட்டிணம் இரயில் நிலையத்திலிருந்து இக்கோயில் 2.கி.மீ தூரத்தில் உள்ளது. சென்னை, கும்பகோணம், தஞ்சை, திருவாரூர், திரிச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை முதலிய இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது.

தரிசன நேரம் : மு.ப. - 6.00 - 12.00 & பி.ப. 4.30 - 8.00

கருத்துகள் இல்லை:

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1