திருச்சிறம்பலம்
[5] திருவாய்மூர்
இறைவர் பெயர் : வாய்மூர் நாதர்
இறைவியார் பெயர் : பாலின் நன்மொழியாள்.
தலமரம் : பலா
தீர்த்தம் : சூரிய தீர்த்தம்
வழிபட்டோர் : சூரியன்
தேவாரப்பாடல்கள்:
சம்பந்தர் :
- தளிரிள வளரென உமை ... 2 / 111
அப்பர் :
- எங்கே என்னை .... 5 / 50
- ப்பாட அடியார் .... 6 / 77
தலவரலாறு:
- திருமறைக்காட்டில் (வேதாரண்யம்) இருந்து “திருநாவுக்கரசரை”த் “திருவாய்மூருக்கு” வா என்று இறைவன் அழைத்துத் திருக்கோவிலைக் காட்டிய அற்புதத் திருத்தலம்.
- “திருஞானசம்பந்தருக்கு” ஈசன் அம்பிகையுடன் இருந்து நடனக் காட்சி நல்கியத் திருத்தலம்.
- முசுகுந்த சக்ரவர்த்தியால் எழுந்தருளப்பட்ட ஏழு தியாகேச விடங்கத் தலங்களுள் ஒன்று.
- தியாகேசர் - நீல விடங்கர்; நடனம் - கமல நடனம். அதாவது நீரில் மலர்ந்துள்ள தாமரை மலர் நீரின் அசைவிற்கேற்ப அசைவது போன்றது. கமலம் என்பது தாமரை மலரைக் குறிப்பதாகும்.
- இத் தலம் சூரியன் வழிபட்டத் தலம். பங்குனி மாதத்தில் குறிப்பீட தேதிகளில் சூரிய கிரணங்கள் சுவாமிமேல் படுகின்றன.
- இவ்வூருக்கு வடமொழியில் “லீலாஹாஸ்யபுரம்” என்ற பெயரும் உண்டு.
அமைவிடம்: இத் தலத்திற்கு, திருவாரூரிலிருந்து திருக்குவளை வழியாக வேதாரண்யம் செல்லும் பேருந்துகளில் செல்லலாம்.
தரிசன நேரம் : மு.ப. 7.30 - 12.00 & பி.ப.4.00 - 8.30
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக