செவ்வாய், 26 அக்டோபர், 2010

சப்த விடங்கர்த் தலங்கள்


திருச்சிற்றம்பலம்
[4]திருமறைக்காடு
இறைவர் பெயர் : வேதாரண்யேஸ்வரர் - மறைக்காட்டு மணாளர் 
இறைவி பெயர்: யாழைப்பழித்த மொழியாள்
தல மரம் :வன்னி
தீர்த்தம் : வேத தீர்த்தம் - கடல் துறை - மணிகர்ணிகை - தேவபூஷணம்
வழிபட்டோர் : வேதங்கள் - இராமர் - அகத்தியர் - முசுகுந்த சக்ரவர்த்தி - கௌதமர் - விசுவாமித்திரர் - வசிஷ்டர் - நாரதர் - பிரமன் - கங்கை - காவிரி.

தேவாரப் பாடல்கள் : 
சம்பந்தர் : 
  1.  சிலைதனை நடுவிடை ... 1 / 22
  2. சதுரம் மறைதான் ... 2 / 37
  3. வேயுறு தோளிபங்கன் ... 2 / 85
  4. பொங்கு வெண்மணல் ... 2 / 91
  5. கல்பொலி சுரத்தின் ... 3 / 76
அப்பர் : 
  1. இந்திரனோடு .... 4 / 33
  2. தேரையும் மேல் ... 4 / 34
  3. ஓதாமல் கடல் ... 5 / 9
  4. பண்ணின் நேர் .... 5 / 10
  5. தூண்டு சுடர் ... 6 / 23
சிறப்புகள் :
  • நான்கு வேதங்களும் வழிபட்டதால் வேதாரண்யம் என்னும் பெயர் பெற்றது.
  • அகத்தியருக்கு திருமணக் காட்சி நல்கியத் திருத்தலம்.
  • வேதங்களால் அடைக்கப்பட்டத் திருக்கதவினை அப்பரடிகள் திறப்பிக்கவும், திருஞானசம்பந்தர் திருக்காப்பிடவும் பாடிய பெருமைப் பெற்றத் தலம்.
  • இராமர், இராவணனை கொன்ற பழி நீங்கப் பூஜித்தத் தலம்.  எனவே இஃது கோடிக்கரை என்றும் வழங்கப்படுகின்றது. 
  • இக்கோவிலில் எரியும் விளக்கில் இருந்த நெய்யை உண்ணுவதற்கு வந்த எலி, அணையும் நிலையிலிருந்த திரியைத் தூண்டி மறு பிறவியில் மாவலிச் சக்ரவர்த்தியாகப் பிறந்தது. இச்செய்தியை, அப்பரடிகள் திருக்குறுக்கைத் தல தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
  • முசுகுந்தச் சக்ரவர்த்தி தியாகேசப் பெருமானை எழுந்தருளுவித்த ஏழு விடங்கத் தலங்களுள் ஒன்று. 
  • தியாகர் - புவன விடங்கர் - மேனி - மரகத்திருமேனி; - ஆசனம் - இரத்தின சிம்மாசனம்; நடனம் - ஹம்ச நடனம்.அதாவது அன்னம் போல் மெதுவாக அடியெடுத்து வைத்து உடலை அசைத்தாடும் நடனமே அம்ச நடனமாகும்.
  • திருவிளையாடல் புராணம் இயற்றிய பரஞோதி முனிவரும், தாயுமான சுவாமிகளும் அவதரித்த தலம்.பரஞ்சோதி முனிவரே இக்கோயில் தல புராணத்தை அருளிச் செய்துள்ளார்.
  • இங்குள்ள தீர்த்தம் மணிக்கர்ர்ணிகை. காசியில் உள்ளது போன்று சிறப்பு பெற்றது. 
  • ஆடி,தை அமாவாசை போன்ற புண்ணிய காலங்களில் இன்குள்ள கோடி தீர்த்தத்தில் நீராடுவது புண்ணியமாகும்.
  • இங்குள்ள தலமரமான வன்னி மரத்தினடியில் விசுவாமித்திரர் தவம் இயற்றியதாக கூறுவர்.
  • சோழர் - விஜய நகர அரசர் கால கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டுள்ளன.
  • 92 கல்வெட்டுகள் உள்ள கோவில்.
அமைவிடம் : திருத்துறைப்பூண்டி - வேதாரண்யம் இரயில் பாதையில் வேதாரண்யம் நிலையத்திலிருந்து மேற்கே 1. கி.மீ. தூரத்தில் உள்ளது. திருத்துறைப்பூண்டி, நாகை, ஆகிய இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது.
தரிசன நேரம் : மு.ப. 6.30 - 12.00 & பி.ப. 5.00 - 8.30

கருத்துகள் இல்லை:

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1